பொருளடக்கத்திற்கு தாவுக

எம்மைப்பற்றி!

உயிரினங்களின் போக்கும், வாழ்வும், எல்லையைத் தேடும் தாகமும் எதற்காக…?!?  கேள்விகள் என்னைத்  துளைத்தபோது விவரம் அறிந்தவர்களிடம் கேட்டேன். விவரமறிந்தவர்களின் எழுத்துக்களை, கருத்துக்களை, அவர்கள் வாழ்வின் முழுமைத்தன்மையைப் பார்த்து, படித்து, கேட்டு  கற்று உணர்ந்தபோது…முதலில் எனக்கு நான் யார்? என்று தெரியவேண்டும். அதன்பின்னரே மற்றது என்ன? மற்றவர் யார்? என்பதை உணர முடியும் என்று உணர்ந்தேன்.  மையத்தில் நிற்பதே மனிதனின் அடிப்படை என்பதையும் உணர்ந்தேன். பிற உயிர்களுக்குத் துன்பமிழைக்காமல்…இன்பமும் அன்றி துன்பமும் அன்றி ஆனந்தமாக வாழ்வதைத்தான் நான் விரும்புகிறேன் என்பதையும் உணர்ந்தேன். என்னைப் போலவே பிறரையும் எண்ணினேன். எண்ணுகிறேன். வாழ்கிறேன்.  நன்றாக வாழ்ந்துபார்த்துவிட்டு…அடுத்தது என்ன என்று அப்போது முடிவு செய்துகொள்ளலாம் என்றிருக்கிறேன். எனக்கு நானே வாழ்வதை…அந்த வாழ்வில் நான் சந்திக்கும் சுவாரஸ்யங்களில் “பரவாயில்லை வெளிப்படுத்தலாம்” என நான் முடிவெடுக்கும் விடயங்களை இங்கு பதிவு செய்கிறேன். இதன் நோக்கம் என்னைப்போலவே தேடல் உள்ளவர்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் இந்தப் பதிவுகள் உதவட்டுமே என்பதுதான். ​பெயர் விஸ்வநாத். வசிப்பது ​தற்​போது இந்தியாவில் தமிழ்நாட்டில். ​தொடர்புக்கு – vishwaa.journalist@gmail.com

இந்தப் பிறவியில் இந்த உருவத்தில் நான்!